இந்தியா முதலாவது டி20 போட்டியில் இலங்கையை வீழ்த்தியது.

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி லக்னோவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய இந்திய அணி இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரது அரைசதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்களைச் சேர்த்தது.

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக இஷான் கிஷான் 89 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 57 ரன்களையும் சேர்த்து அசத்தினர்.

இதையடுத்து இலக்கை துரத்திய இலங்கை அணியின் தொடக்க வீரர் பதும் நிஷங்கா, புவனேஷ்வர் குமார் வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார்.

அதன்பின் களமிறங்கிய கமிலி மிஷ்ரா, ஜெனித் லியாங்கே , தினேஷ் சண்டிமல், தசுன் ஷன்கா, சமிகா கருணரத்னே என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து நடையைக் கட்டினர்.

இருப்பினும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சரித் சலங்கா அரைசதம் கடந்தார். இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமே எடுத்தது.

இந்திய அணி தரப்பில் வெங்கடேஷ் ஐயர், புவனேஷ்வர் குமார் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதன் மூலம் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

Leave A Reply

Your email address will not be published.