காஷ்மீரில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு

காஷ்மீரில் கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் செயல்படத் தொடங்கியுள்ளன.

பள்ளிகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சி காணப்பட்டது. புன்னகையுடன் இன்றைய நாளைத் தொடங்கினர்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டுள்ளன. பல மாதங்களுக்குப் பிறகு ஸ்ரீநகரில் உள்ள மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர். மாணவர்கள் பள்ளிகள் திறக்கப்பட்டதை ஒரு பண்டிகை போல் கொண்டாடி மகிழ்ந்தனர்.

முதல் சில வாரங்களுக்கு மாணவர்கள் சீருடை அணிய வேண்டிய அவசியமில்லை எனப் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.