மாகாண சபைத் தேர்தலை நடத்தி , 13வது திருத்தத்தை அமுல்படுத்த இந்தியா, ஜெனிவாவில் இலங்கைக்கு அழுத்தம்

உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இந்தியா , இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி இந்திரமணி பாண்டே இலங்கை தொடர்பான அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து, ஐக்கிய இலங்கையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வொன்றை பெற்றுத்தர இலங்கை பாடுபட வேண்டும் என்றார் அவர்.

13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.