கோட்டாவை 8ஆம் திகதி சந்திக்கின்றார் மைத்திரி சு.கவின் சிரேஷ்ட உறுப்பினர்களும் பங்கேற்பு.

மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் 8ஆம் திகதி மாலை 4 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

அரசின் செயற்பாடுகளைக் கடுமையாக விமர்சித்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோரை அமைச்சரவையில் இருந்து ஜனாதிபதி வெளியேற்றியுள்ளார். எனினும், பங்காளிக் கட்சிகளின் மாநாட்டில் பங்கேற்ற சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கு தனது நிலைப்பாட்டை ஜனாதிபதி தெளிவுபடுத்தும் நோக்கிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெறக்கூடும் எனத் தெரியவருகின்றது. இதன்போது தமது தரப்பு கோரிக்கைகளையும் சுதந்திரக் கட்சி முன்வைக்கும்.

Leave A Reply

Your email address will not be published.