ஈஸ்டர் படுகொலை மாபெரும் அரசியல் சதியின் ஒரு பகுதி! உலகுக்கு உரத்து சொன்ன கார்டினல்! (Video)

ஜெனீவா: ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49வது அமர்வில் உரையாற்றிய மேதகு கர்தினல் மல்கம் ரஞ்சித், இலங்கையில் நடந்த ஈஸ்டர் ஞாயிறு படுகொலை, ஒரு பெரிய அரசியல் சதியின் ஒரு பகுதியாகும் என தெரிவித்தார்.

அவரது உரையின் முழு வடிவம் பின்வருமாறு,

மாண்புமிகு தலைவர் அவர்களே, அன்புள்ள தாய்மார்களே, கணவான்களே,

ஏப்ரல் 21, 2019 ஈஸ்டர் ஞாயிறு அன்று இலங்கையில் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் 82 குழந்தைகள் மற்றும் 14 நாடுகளைச் சேர்ந்த 47 வெளிநாட்டவர்கள் உட்பட 269 பேர் கொல்லப்பட்டதோடு, 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த படுகொலை பற்றிய முதல் அபிப்ராயம் இஸ்லாமிய தீவிரவாதிகளின் குழு ஒன்றின் செயல் என தோன்றியது.
ஆனால், இந்த படுகொலை ஒரு பெரிய அரசியல் சதியின் ஒரு பகுதி என்று அடுத்தடுத்த விசாரணைகள் வெளிப்படுத்தின.

உண்மையைக் கண்டறியும் சிவில் சமூக அமைப்புகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் , இலங்கை அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கத் தவறியுள்ளது.

தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிப்படுத்துவதற்கும், அதற்கு காரணமானவர்கள் மீது சட்டத்தை அமுல்படுத்துவதற்கும் பதிலாக, நியாயம் கேட்பவர்களை துன்புறுத்தவும் அச்சுறுத்தவும் முயற்சிக்கின்றனர்.

இதன் விளைவாக, இந்த கொடூரமான குற்றத்திற்கு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றி தெரியாத, நாங்கள் இன்னும் இருளில் இருக்கிறோம்.

இது பாதிக்கப்பட்டவர்களின் அடிப்படை மனித உரிமைகளை கடுமையாக மீறும் செயலாக இருப்பதால், ஈஸ்டர் ஞாயிறு படுகொலையின் பின்னணியில் உள்ள உண்மையைக் கண்டறிய ஐ.நா மனித உரிமைகள் பேரவை மற்றும் அதன் அனைத்து உறுப்பு நாடுகளையும் நாங்கள் கேட்டுக்கொள்வது கடந்த ஆண்டு இந்த கவுன்சிலால் தொடங்கப்பட்ட ஆதாரங்களைத் திரட்டி, . ஒரு பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படுவதை உறுதி செய்வதற்காக ஒத்துழைக்க வேண்டும் என்பதாகும்.
Video

Leave A Reply

Your email address will not be published.