வழமைக்கு திரும்பும் எரிபொருள் விநியோகம்! – அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு.

நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் நாளை (9) மற்றும் நாளை மறுதினம் (10) வழமைக்கு திரும்பும் என எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.

எரிசக்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அவர், இன்றைய தினம் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இரண்டு கப்பல்களில் இருந்து இறக்கப்பட்ட எரிபொருள் இருப்புக்கள் தற்போது எரிபொருள் நிலையங்களுக்கு விநியோகிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.