வாகன ஓட்டுநர் உரிமங்களுக்கான சலுகை காலம் நீடிப்பு.

ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை காலாவதியாகும் வாகன ஓட்டுநர் உரிமங்களுக்கான சலுகை காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. அந்த வகையில். ஏப்ரல் முதலாம் திகதி முதல் ஜூன் 30ஆம் திகதி வரை காலாவதியாகும் வாகன ஓட்டுநர் உரிமங்கள் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ஜூலை முதலாம் திகதி முதல் செப்டம்பர் 30 ஆம் திகதி வரை காலாவதியாகும் உரிமங்கள் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாகன ஓட்டுநர் உரிமங்கள் காலாவதியாகும் நாள் முதல் இந்த நீட்டிப்பு அமுலுக்கு வரும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்தோடு அச்சுப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக அட்டைகளுக்குப் பதிலாக தற்காலிக உரிமம் வழங்கப்படும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.