முல்லைத்தீவு மாவட்ட குத்துச்சண்டை சங்கம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது!

முல்லைத்தீவு மாவட்ட உள்ளக விளையாட்டு அரங்கில் நேற்று (08) மாவட்ட குத்துச்சண்டை வீரர்களுக்கான பொதுகூட்டம் நடைபெற்றதைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட குத்துச்சண்டை சங்கம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் குத்துச்சண்டை விளையாட்டை ஊக்குவித்தல் மற்றும் மேம்படுத்தும் முகமாகவே இவ்வாறு மாவட்ட குத்துச்சண்டை சங்கம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந் நிகழ்வின் குத்துச்சண்டை சங்க நிர்வாக தெரிவு இடம்பெற்றுள்ளதுடன், எதிர்காலத்தில் மாவட்டத்தில் குத்துச்சண்டை விளையாட்டை ஊக்குவிக்கும் செயற்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

இதனைவிட எதிர்கால விடயங்கள் தொடர்பாக தீர்மானங்களும் எட்டப்பட்டுள்ளன.

வடமாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட அணி தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.