இனிவரும் தேர்தலில் சு.க. தனித்தே போட்டி அமைச்சர் நிமல் உறுதி.

நாட்டில் அடுத்து நடைபெறும் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்துத்தான் போட்டியிடும் என்று அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே நிமல் சிறிபாலடி சில்வா இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கென தனித்துவம் இருக்கின்றது. அடுத்து வரும் தேர்தலில் நாம் தனித்தே போட்டியிடுவோம். தேர்தலின் பின்னர் எமது கொள்கையை ஏற்பவர்களுடன் கூட்டணி அமைக்கலாம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.