ஜனாதிபதியின் விசேட உரையின் போது நாடளாவிய ரீதியில் மின் வெட்டு இல்லை…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ விசேட உரையொன்றை ஆற்றும் காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் எந்தவொரு பகுதியிலும் மின் தடைகள் ஏற்படாது.

இதன்படி ,ஜனாதிபதி இன்று இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.

இலங்கை மின்சார சபையினால் இன்று அறிவிக்கப்பட்ட மின்வெட்டு அட்டவணையின்படி, இரவு 8.00 மணி முதல் 9.30 மணி வரை மின் தடைகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

மேலும் ,இன்று மாலை 8.00 மணியுடன் மின்வெட்டு முடிவடைந்து, நியமிக்கப்பட்ட பிரிவுகளில் இரவு 9.30 மணி முதல் அமலுக்கு வரும்.

Leave A Reply

Your email address will not be published.