இந்தியாவின் உதவியை தொடர்ந்து நாட்டில் பல வதந்திகள் பரவுகின்றன- அரசாங்கம் தெளிவுபடுத்தவேண்டும்.

இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன் உதவி குறித்து இலங்கை அரசாங்கம் விசேட அறிக்கையொன்றை வெளியிடவேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள்விடுத்துள்ளார்.

மிகவும் நெருக்கடியான தருணத்தில் இந்தியாவிடமிருந்து இவ்வளவு பெரியநிதி உதவி கிடைத்தது அதிஸ்டம் எனஅவர்தெரிவித்துள்ளார்.

இந்தியா முதல்தடவை இவ்வாறான நிதிஉதவிக்கு அனுமதியளித்துள்ளது இது குறித்து அறிக்கையொன்றை வெளியிடவேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்குள்ளது என அவர்தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் உதவியை தொடர்ந்து நாட்டில் பல வதந்திகள் பரவுகின்றன என தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் வெளிவிவகார அமைச்சு இது குறித்து தெளிவுபடுத்தவேண்டும் என தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.