மெனிக்கும்புர பிரதேசத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழப்பு.

மெனிக்கும்புர – கட்டுகஸ்தொட்ட பிரதேசத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த தீ விபத்து இன்று (24) அதிகாலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 4 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்துள்ளதுடன், காவல்துறையினர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.