கொழும்பில் ஜெய்சங்கர் இன்று முக்கிய சந்திப்புகளில்!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் கொழும்பில் இன்று முக்கிய சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார்.

ஜெய்சங்கர், உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றிரவு இலங்கை வந்தடைந்தார்.

அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, காமினி லொக்குகே உள்ளிட்ட இலங்கைக் குழுவினர், இந்திய வெளிவிவகார அமைச்சரவை வரவேற்றனர்.

இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோருடன் அவர் பேச்சு நடத்தவுள்ளார். அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளையும் சந்திக்கவுள்ளார்.

அத்துடன், யாழ்ப்பாணத்திலுள்ள கலாசார நிலையத்தையும் காணொளி தொழில்நுட்பம் மூலம் அவர் திறந்துவைப்பார்.

Leave A Reply

Your email address will not be published.