ஞாயிறு ஊரடங்குச் சட்டமா? இல்லை என்கிறது பொலிஸ்.

நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்று சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

நாடு முழுவதிலும் எதிர்வரும் 3ஆம் திகதி அரசுக்கு எதிரான தன்னெழுச்சிப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே, அன்றைய நாளில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுமா என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.