தயாசிறி தனது இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார்

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தனது இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார்.

தற்போது தனது இராஜினாமா கடிதத்தை தயாரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைச்சர்களும் அந்த முடிவை எடுத்தார்களா என நாம் வினவியபோது, ​​தாம் தீர்மானம் எடுத்துள்ளதாகவும் ஏனைய அமைச்சர்கள் தொடர்பில் எதுவும் கூற முடியாது எனவும் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏனைய அமைச்சர்கள் இராஜினாமா செய்வதற்கு இணங்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.