பேராசிரியர் சோ.சந்திரசேகரம் அவர்கள் காலமானார்

பேராசிரியர் சோ.சந்திரசேகரம் (1944-2022)ம் அவர்கள் காலமானார்.
இத் துயரச் செய்தியை அனைவருக்கும் அறியத் தருகிறோம்

இவர், 1944ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் திகதி பதுளையில் பிறந்தார்.

இவர் இலங்கையின் கல்வி வளர்ச்சிக்காகவும் சமூக நலன்சார் விடயங்களுக்காகவும் பல்வேறு தொண்டுகளை ஆற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலையகத்தைப் பிறப்பிடமாகக் கொண்டிருந்த போதிலும் அனைத்து பிரதேச மக்களிதும் அபிமானத்திற்கும், மரியாதைக்கும் உரியவராகத் திகழ்ந்தார்.

ஓய்வு பெற்ற பல்கலைக்கழக சிரேஸ்ட பேராசிரியர் சோமசுந்தரம் சந்திரசேகரம் அவர்கள் தமது 77ஆவது வயதில் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
அன்னாரது ஆத்மா சாந்தி அடைவதாக.

அன்னாருக்கு எமது அஞ்சலிகள்

Leave A Reply

Your email address will not be published.