50 லட்சம் சொத்து!10 பவுன் நகைகள்.. அனைத்தையும் ராகுல் காந்திக்கு எழுதி வைத்த புஷ்பா பாட்டி.. யார் அவர்?

இந்தியாவில் 78 வயதான பாட்டி தனது லட்சக்கணக்கான சொத்துக்களை ராகுல் காந்தி பெயரில் எழுதி வைத்துள்ளார்.

டேராடூனைச் சேர்ந்தவர் 78 வயது பாட்டி புஷ்பா முஞ்சால். தனது ரூ. 50 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களையும் ராகுல் காந்தி பெயருக்கு எழுதிக் கொடுத்துள்ளார்.

கூடவே 10 பவுன் தங்க நகையையும் அவர் ராகுல் காந்திக்கு எழுதி வைத்துள்ளார். புஷ்பாவுக்கு ராகுல் காந்தி என்றால் ரொம்பப் பிடிக்குமாம். அவர் மாதிரியான தலைவர்கள்தான் நாட்டுக்குத் தேவை என்பது பாட்டியின் அசைக்க முடியாத கருத்தாக உள்ளது.

இந்த சொத்துக்கள் தனக்குப் பின்னால் யாருடையே கைகளுக்குப் போய் வீணாவதை விட ராகுல் காந்திக்குப் போனால் நன்றாக இருக்கும் என்று நினைத்துள்ளார் புஷ்பா பாட்டி. உடனே இதுகுறித்து ஒரு உயில் எழுதி விட்டார்.

தனது சொத்துக்கள் அனைத்தும் தனக்குப் பின்னால் ராகுல் காந்திக்குத்தான் என்று அதில் கூறியுள்ளார்.

இந்த உயிலை டேராடூன் கோர்ட்டிலும் அவர் தனது வழக்கறிஞர் மூலம் தாக்கல் செய்தார். தற்போது மாநில காங்கிரஸ் தலைவரிடம் நேரிலும் போய் ஆவணங்களைக் கொடுத்துள்ளார்.

இந்த சொத்துக்களை புஷ்பா பாட்டி சுயமாக சம்பாதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.