மக்கள் போராட்டத்தை திசை திருப்பும், அரசின் மற்றுமொரு சமூக ஊடக பிரச்சாரம்!

மக்களை திசை திருப்பும் புதிய நடவடிக்கையாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஆளும் கட்சி எம்.பி.க்கள் தங்களது முகநூல் புகைப்படத்தை மாற்றியுள்ளனர்.

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்கள் பயன்படுத்தும் தேசியக் கொடியை அனைத்துத் தலைவர்களும் தங்கள் முகப் படங்களை மாற்றியுள்ளனர்.அதாவது போராட்டக்காரர்கள் தங்களுக்கு சார்பாக போராடுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த இப் புதிய சமூக ஊடக குறுக்கு வழியை ஆரம்பித்துள்ளனர்.

பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் ஏனைய தலைவர்கள் தமது முகநூல் பதிவுகள் தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவதற்கு பொதுமக்களை அனுமதித்துள்ள போதிலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது முகநூல் பக்கத்தில் கருத்துகள் பதிவிடுவதை தடுத்து வருகின்றார்.

இதேவேளை, சமூக வலைத்தளங்களிலும் தலைதூக்கிய அரச எதிர்ப்பு மற்றும் ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தை திசை திருப்பவே அரசாங்கம் இந்த பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.