பெற்றோரை கொடூரமாக வெட்டி கொலை செய்த மகன் – கேரளாவில் பயங்கரம்!

கேரளாவில் பெற்றோரை கொடூரமாக வெட்டி கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரளா மாநிலம் திருச்சூர் ஈஞ்சக்குண்டு பகுதியை சேர்ந்தவர் அனீஷ்(38). இவர் தனது தந்தை குண்டில் சுப்பிரமணியன் (68) தாய் சந்திரிகா (63) ஆகியோருடன் வசித்து வருகிறார். இவர்களது வீட்டில் பல நாட்களாக அடிக்கடி தகராறு வாக்குவாதம் நடந்து வந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை அனீஷின் தாய் தந்தை இருவரும் வீட்டு முற்றத்தில் மாமர கன்று நட முயன்றதில் ஏற்பட்ட தகராறு சம்பவத்திற்கு வழிவகுத்தது.

வீட்டு முற்றத்தில் மா மரக்கன்று நடுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறு முற்றியிருக்கிறது. தொடர்ந்து வாக்குவாதங்கள் நடைப்பெற கைகலப்பாக மாறியிருக்கிறது. தாக்குதல் காரணமாக இருவரும் கூச்சலிடவே, அனீஷ் வீட்டிற்குள் சென்று அருவா கத்தியை எடுத்துள்ளார்.

இதனை பார்த்து அலறியடித்துக்கொண்டு சாலையில் ஓடிய தாய் சந்திரிகாவை முதலில் சர மாரியாக வெட்டி கொன்றுள்ளார். பின்னர் தந்தையின் கழுத்தை வெட்டியுள்ளார். இதனால் அவரது தந்தை கழுத்து துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தேவாலயத்திற்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த உள்ளூர்வாசிகள் முன்னிலையில் இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

சம்பவத்திற்குப் பிறகு குற்றவாளி பைக்கில் அனிஷ் தப்பி சென்றுள்ளார். தொடர்ந்து குற்றவாளியை தேடும் வேட்டையில் இறங்கிய போலீசார் லுக் அவுட் நோட்டீஸை வெளியிட்டனர். பின்னர் அனீஷ் திங்கள்கிழமை காலை திருச்சூர் கமிஷனர் அலுவலகத்தில் வந்து சரணடைந்ததால் கிழக்கு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று கைது செய்யப்பட்டார். பெற்றோரை மகன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் கேரளா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.