முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிவிட்டாரா?

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. பசில் ராஜபக்ஷ இன்று (ஏப்ரல் 16) காலை இரத்மலானை விமான நிலையத்திலிருந்து N 750 GF பிரைவேட் ஜெட் விமானத்தில் புறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பசில் ராஜபக்ஷ கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலோ அல்லது இரத்மலானை கொழும்பு சர்வதேச விமான நிலையத்திலோ இருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படவில்லை என விமான நிலைய வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

எவ்வாறாயினும், இன்று காலை N 750 GF பிரைவேட் ஜெட் நாட்டை விட்டு வெளியேறியதாக இணையத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

இதற்கிடையில், பசில் ராஜபக்ச கொவிட் தொற்று காரணமாக கொழும்பில் உள்ள லங்கா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக நேற்று தெரிவிக்கப்பட்டது.


Leave A Reply

Your email address will not be published.