ரஷ்ய படைகள் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் கைக்குழந்தை உட்பட 7 பேர் பலி…

உக்ரைனின் கார்க்கிவ் நகரில் ரஷ்ய படைகள் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் கைக்குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி ,ரஷ்ய படைகள் வீசிய குண்டு அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் பாய்ந்ததில் அந்த கட்டிடம் பலத்த சேதமடைந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 7 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 34 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மேலும் ,கார்க்கிவ் நகரம் போர் தொடங்கிய நாள் முதலே ரஷ்ய படைகளின் முக்கிய குறியாக இருந்து வருகிறது. இந்த வாரத்தில் ஒரே இரவில் அங்கு சுமார் 60 பீரங்கி குண்டுகள் மற்றும் ஏவுகணைகள் குடியிருப்புப்பகுதிகள் மற்றும் கட்டிடங்களை தாக்கியதில் பலர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.