திருமதி. ஞானேஸ்வரி சிவராசசிங்கம்.

திருமதி ஞானேஸ்வரி சிவராசசிங்கம்
(ஓய்வு பெற்ற கிளி/பரந்தன் இந்து ம.வி ஆசிரியர்)

மீசாலையைப் பிறப்பிடமாகவும் இல 73, குமரபுரம் பரந்தனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஞானேஸ்வரி சிவராசசிங்கம் அவர்கள் கடந்த (13.04.2022) புதன்கிழமை இறைபதமடைந்தார்.

அன்னார் திரு. காசிநாதன் சிவராசசிங்கம் (சிவராசா) அவர்களின் பாசமிகு மனைவியும், காலஞ்சென்ற கந்தையா கண்மணி தம்பதியரின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற காசிநாதர் பார்வதி தம்பதியரின் மருமகளும், நாகரத்தினம், ஶ்ரீகாந்தன், சிவபுத்திரன், சிவகுமாரன் ஆகியோரின் சகோதரியும், சிவஞானவதனி (ஆசிரிய ஆலோசகர் ஆங்கிலம் – தென்மராட்சி கல்வி வலயம்), சிவஞானசந்தன்(லண்டன்), சிவஞானசங்கர்(லண்டன்), சிவஞானவதனா(லண்டன்)(முன்னாள் கிளி/பரந்தன் இந்து ம.வி ஆசிரியர்) ஆகியோரின் அன்புத் தாயாரும் திரு. க. சிறீதரன்(ஓய்வு பெற்ற மக்கள் வங்கி ஊழியர் – ஸ்ரான்லி வீதி யாழ்ப்பாணம்), விக்ரோறியா(லண்டன்), ஷீலா(லண்டன்), நந்தரூபன்(லண்டன்) ஆகியோரின் மாமியாரும், ஶ்ரீகார்த்திகன், ஶ்ரீகௌசினி, ஶ்ரீகௌசாயினி, நிலானி, நிஷாந்தன், மனோஜ், சுமங்கலி, ஷிவாணி, ஷாளினி, நரூஷா, ஷரூஜன், நரூஜன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும், ஹைரோவின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (17.04.2022) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோரக்கன்கட்டு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

முகவரி
இல. 73,
குமரபுரம்
பரந்தன்.

https://www.riphall.com/

Leave A Reply

Your email address will not be published.