தேசிய எதிர்ப்பு தினம்-அனைத்து பணியிடங்களிலும் தொடர் வேலை நிறுத்தம்.

எதிர்வரும் 20ஆம் திகதியை தேசிய போராட்ட நாளாக அறிவித்து அனைத்துப் பணியிடங் களிலும் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட அனைத்து தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்க்ஷ மற்றும் அரசாங்கம் எடுத்த தன்னிச்சையான மற்றும் ஆணவமான முடிவுகளால் நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட் டுள்ளதாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகள் கூட்டமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

நாட்டின் உழைக்கும் மக்களின் ஆழ்ந்த வெறுப்பைக் குறிப்பிட்டு, மக்கள் போராட்டத்தின் வெற்றிக்கு நிபந்தனையற்ற பங்களிப்பைச் செய்யத் தீர்மானித்துள்ளதாக தொழிற்சங் கங்கள் மற்றும் வெகுஜன இயக்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.