நஸீருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க 22இல் கூடுகின்றது மு.காவின் உயர்பீடம்.

“முழுநாடும் ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்புவதற்குப் போராடிக்கொண்டிருக்கின்ற நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீண்டுமொரு தடவை மீறிக்கொண்டு அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்ட நஸீர் அஹமட் தன்னை ஓர் அவமானச் சின்னமாக மாற்றிக்கொண்டுள்ளார்.”

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி. தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஏற்கனவே கட்சியின் கட்டுப்பாட்டை மீறியமைக்காக நஸீர் அஹமட் உட்பட 4 உறுப்பினர்களையும் கட்சியின் பதவிகளிலிருந்து நீக்கி, ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டிருக்கும் நிலையில், அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்டமையானது மிகவும் அசிங்கமானது.

கட்சியின் உயர்பீடம் எதிர்வரும் 22ஆம் வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக ஒன்றுகூடி, நஸீர் அஹமட்டுக்கு எதிராக உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.