ராஜமௌலி இயக்கும் அடுத்த படத்தின் கதை இது தான் !

பாகுபலி படம் மூலம் இந்திய முழுவதும் அறியப்பட்ட இயக்குனராக இருக்கிறார் ராஜமௌலி . பாகுபலி -1 மற்றும் பாகுபலி -2 ஆகிய படங்களின் வெற்றிலை பிறகு ராஜமௌலி இயக்கிய படம்
“ரத்தம் ரணம் ரௌத்திரம் ” . இந்த படத்தில் ராம் சரண் , ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் இணைந்து நடித்து இருந்தனர் . மேலும் சமுத்திரக்கனி , ஆலியா பட் , அஜய் தேவ்கான் ஆகியோர் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர் .இந்த படம் இந்திய முழுக்க மிக பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

இந்த வெற்றியை தொடர்ந்து நடிகர் மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்குகிறார் ராஜமௌலி .இந்த படம் சுமார் 500 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது இந்த படம் பெருமபாலான படப்பிடிப்பு தென் ஆப்பிரிக்கா நாட்டில் நடக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது . புதையல் வேட்டையை மையமாக வைத்து இந்த படத்தை எடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது .தென் ஆப்ரிக்காவில் உள்ள காட்டு பகுதிகளில் இந்த படப்பிடிப்பு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் மகேஷ் பாபு தற்பொழுது இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் சர்கார் வாரி பாட்டா என்கிற படத்தில் நடித்து வருகிறார் . இதனை தொடர்ந்து இயக்குனர் திருவிக்கம் சீனிவாசன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருக்கிறார் .

Leave A Reply

Your email address will not be published.