ராஜபக்ச குடும்பம் விசேட சந்திப்பு! – கோட்டா பங்கேற்கவில்லை.

ராஜபக்ச குடும்பத்தினரின் விசேட சந்திப்பு இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது என சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்திப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இந்தத் திடீர் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

ராஜபக்ச குடும்பத்தின் மூத்த உறுப்பினரான சமல் ராஜபக்சவின் கொழும்பிலுள்ள இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.

சமல் ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, சசீந்திர ராஜபக்ச ஆகியோர் இந்தச் சந்திப்பில் பங்கேற்றுள்ளனர். எனினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பங்கேற்கவில்லை எனத் தெரியவருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.