நோன்பு திறக்கும் விசேட நிகழ்வு.

1500 பேருக்கும் அதிக எண்ணிக்கையிலான நோன்பாளிகள் கலந்து கொண்டு நோன்பு திறக்கும் விசேட நிகழ்வு குருநாகல் அல் ஜாமிஉல் அஸ்ஹர் பசார் பள்ளிவாசலில் இடம்பெற்றது.

குருநாகல் நகர் ஐடெக் இஸ்லாமிய வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் நோன்பு திறக்கும் இப்தார் விசேட நிகழ்வு குருநாகல் அல் ஜாமிஉல் அஸ்ஹர் பசார் பள்ளிவாசலில் இஸ்லாமிய வர்த்தக சங்கத்தின் தலைவர் எம். வை. எம். கியாஸ் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மௌலவி ரஈசஸ{ல் முகத்தம் அஹமட் ஸஃபி விசேட துஆப் பிரார்த்தனையினையும் மார்க்கச் சொற்பொழிவினையும் நிகழ்த்தினார்.

இதன் போது வர்த்தக சங்கத்தின் செயலாளர் எம். சலீப்,உதவி செயலாளர் எம். ஸலீர், பொருளாள ஏ.எம்.இர்பான், உதவிப் பொருளாளர் ஏ. ஏ. எம். அஸாம் உள்ளிட்ட சங்கத்தின் பிரதான செயற்குழு உறுப்பினர்கள்,பள்ளிவாசல் நிர்வாகிகள், உலமாக்கள் என முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது 1500 பேருக்கும் அதிக எண்ணிக்கையிலான நோன்பாளிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

(இக்பால் அலி)

Leave A Reply

Your email address will not be published.