இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கான வெளிநாட்டு நிதியுதவிகள் அனைத்தும் நிறுத்தம்! திட்டங்கள் முடங்கின!

இலங்கையில் அமுல்படுத்தப்பட்டிருந்த அபிவிருத்தித் திட்டங்களுக்காக வழங்கப்பட்டு வந்த உதவிகள் அனைத்தையும் நிறுத்துவதற்கு சம்பந்தப்பட்ட நாடுகளின் வெளிநாட்டு முகவர் நிலையங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் தற்போது நிலவும் ஸ்திரமின்மை காரணமாக இந்த கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்ட பல திட்டங்கள் முடங்கியுள்ளதாக தெரியவருகிறது.

Leave A Reply

Your email address will not be published.