இலங்கையில் விரைவில் பஞ்சம்; புரட்சிகரமான மாற்றம் வேண்டும். ரணில் வலியுறுத்து.

இலங்கையில் எதிர்வரும் காலங்களில் கடுமையான உணவுத் தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எரிபொருளுக்காக வழங்கப்பட்ட இந்தியக் கடன் வசதி மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான ஒரு பில்லியன் டொலர் கடன் திட்டம் முதல் வாரத்தில் முடிவடைவதால் அடுத்த மாதம் இலங்கை பாரிய பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற தனியார் வங்கியாளர்கள் குழுவுடனான கலந்துரையாடலின்போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அரசு உடனடியாகப் பதவி விலகுமாறு கோரி இளைஞர்கள் உட்பட பொதுமக்கள் வீதியில் இறங்கிய போதிலும் நாடாளுமன்றம் உரிய தீர்வை வழங்கத் தவறியுள்ளது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மக்கள் கோரும் புரட்சிகரமான மாற்றத்துக்குச் செவிசாய்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.