முல்லை. வித்தியானந்த கல்லூரி சாதனையாளர்கள் கௌரவிப்பு !

வட மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட வடக்கின் ஐந்து மாவட்டங்களுக்கும் இடையிலான ஆண் பெண் இருபாலருக்குமான திறந்த முறையிலான (open) மல்யுத்த(wrestling) போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட ஆண், பெண் இரு அணிகளும் மாகாணத்தில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டன.

இந் நிலையில் முல்லை மாவட்ட அணி மாகாணத்தில் முதலிடங்களை பெறுவதற்கு பெரும் பங்களிப்பை வழங்கிய முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி மாணவ, மாணவிகளான வீர, வீராங்கனைகளுக்கு அப்பாடசாலையின் அதிபரினால் பாடசாலை சமூகம் சார்பாக அனைத்து மாணவர்கள் முன்னிலையில் பாராட்டி கௌரவம் அளிக்கப்பட்டது.

மு/வித்தியானந்த கல்லூரி மாணவர்களான
முதலாம் இடத்தை பெற்றுக் கொண்ட ம. பிரிந்தன், இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட சி. கயனன், மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்ட அ.டிலிக்சன்,முதலாம் இடத்தை பெற்றுக் கொண்ட சி. கயானா, இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட
வி.ஜனோஜினி வீர வீராங்கனைகளுக்கு பாடசாலை அதிபரால் பாடசாலை சமூகம் சார்பாக அனைத்து மாணவர்கள் முன்னிலையில் இவ்வாறு கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மல்யுத்த பயிற்றுவிப்பாளர் P.ஜெயதர்சன் மற்றும் மாவட்ட விளையாட்டு பயிற்றுனர் R.சகிதரசீலன் ஆகியோரிற்கும் நன்றி தெரிவிக்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.