ஜனாதிபதி தலைமையில் இன்று முக்கிய கலந்துரையாடல்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் இன்று (2) முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி ,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்தவர்களும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

மேலும் , இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பது குறித்து சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் குறித்தும் இதன்போது ஆராயப்படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.