ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 5 பேர் தமிழகத்தில் தஞ்சம்!

இரண்டு மாத கைக்குழந்தையுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 5 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் சென்றடைந்துள்ளனர்.

வவுனியாவில் இருந்து அவர்கள் தமிழகத்தை சென்றடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

2 பெண்கள், ஆண் ஒருவர் மற்றும் சிறுமி ஒருவரும் அவர்களில் அடங்குகின்றனர்.

இதன்படி சேராங்கோட்டை பகுதியில் அவர்கள் மீட்கப்பட்டுள்ளதோடு விசாரணைகளுக்காக மண்டபம் பகுதிக்கு காவல்துறையினர் அழைத்து சென்றதாக தமிழக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

மேலும் கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி முதல் இதுவரை 80 இலங்கையர்கள் ஏதிலிகளாக தமிழகத்தை சென்றடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.