இராஜிநாமா செய்வாரா மஹிந்த?

இலங்கையில் அரசியல் நெருக்கடி உச்சம் பெற்றுள்ள நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாளை (02) விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார் என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

தென்னிலங்கை ஊடகம் ஒன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.

மகாநாயக்க தேரர்கள் மற்றும் மகா சங்கத்தினரின் கோரிக்கையை ஏற்று, பிரதமர் பதவியை இராஜிநாமா செய்யும் முடிவை அவர் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், தான் உள்ளிட்ட மொட்டு கட்சி உறுப்பினர்கள் எதிரணியில் அமரும் தகவலையும் அவர் வெளியிடக்கூடும் என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.