முடிவு ஜனாதிபதியிடம் எதற்கும் பிரதமர் தயார் கோட்டாவுக்கு மஹிந்தர் செய்தி.

“பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி என்ற முறையில் உங்களுக்கு உசிதமானது என நீங்கள் கருதும் எந்தத் தீர்மானத்தையும் எடுங்கள். அதனை ஏற்றுக்கொள்ள நான் தயார்” எனத் தம்பியார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்குத் தமையனார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.

பிரதமர் தனது நிலைப்பாட்டை இன்று காலை ஜனாதிபதியிடம் தெரிவித்தார் என பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்குத் தகவல் வழங்கியுள்ளார்.

இதன்போதே பிரதமர் மேற்படி விடயத்தை ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்தினார் எனப் பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி குறிப்பிட்டார்.

சர்வகட்சி இடைக்கால அரசை நியமிப்பதற்காகப் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை இராஜிநாமா செய்யுமாறு கோரிய மகாநாயக்க தேரர்களின் யோசனையை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு பெளத்த பிக்குகளின் சங்க சபா நேற்று கொழும்பில் வைத்து கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

அதையடுத்தே இந்தத் தகவலை ஜனாதிபதிக்குப் பிரதமர் தெரிவித்திருக்கின்றார் எனக் கூறப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.