பதவி விலகட்டும் மஹிந்த; புதிய பிரதமராகட்டும் டலஸ் இப்படி வலியுறுத்துகின்றார் டிலான்.

“இடைக்கால அரசமைக்க தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டும். இடைக்கால அரசின் பிரதமராக டலஸ் அழகப்பெரும நியமிக்கப்பட வேண்டும்.”

இவ்வாறு ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“இடைக்கால அரசமைக்க தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டும். அதன்பின்னர் ‘மொட்டு’க் கட்சி உறுப்பினர் ஒருவரே பிரதமராகப் பதவியேற்க வேண்டும். அந்தப் பிரதமர் டலஸாக வேண்டும் என்பதே எனது கோரிக்கை.

எமது அரசும் தவறிழைத்துவிட்டது. அதனால்தான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

கடந்த ஆட்சியிலும் குறைகள் இடம்பெற்றுள்ளன. எனவே, நாட்டுக்காக அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.