ராஜபக்ச குடும்பத்தின் கௌரவ பெயர்களை மீள பெறுமாறு மகாநாயக்கர்களிடம் போராட்டக்காரர்கள் கோரிக்கை

அடக்குமுறை, அநீதி, அநாகரிகமான ராஜபக்ச ஆட்சிக்கு எதிராக சங்க ஆணை பிறப்பிக்கக் கோரி , நாடு தழுவிய ரீதியில் போராடும்  #Gotagohome குழுவினரில் சிலர் நேற்றைய தினம் (03) பிற்பகல் கண்டி மல்வத்து மற்றும் அஸ்கிரிய விகாரைகளுக்குச் சென்று மகாநாயக்கர்களை தரிசித்தள்ளனர்.

ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கௌரவங்களை உடனடியாக நீக்குமாறு கோரியும், ராஜபக்ச குடும்பத்தின் பாங்சுகூல நிகழ்வுகள் எதிலும் பங்குபற்றாதிருக்குமாறும்  விசேட மகஜர் ஒன்றும் கையளித்தனர்.

பாங்சுகூல நிகழ்வுகளில் பங்குபற்றாதிருத்தல் என்றால், ஒருவர் இறந்த பின் நடக்கும் இறுதி மத அணுஸ்டானங்களில் பௌத்த பிக்குகள் கலந்து கொள்ளாதிருத்தல் என்பதாகும்.
அதாவது மதத்தால் ஒதுக்கி வைப்பதற்கு சமமாகும்.
இது பௌத்த சமயத்தில் ஒரு மிகப் பெரிய புறக்கணிப்பு மற்றும் தண்டனையாகும்.


Leave A Reply

Your email address will not be published.