பாராளுமன்ற நுழைவு வாயிலில் பதற்றநிலை – 12 பேர் கைதாகி , பின்னர் விடுவிப்பு!

பாராளுமன்ற நுழைவு வாயிலில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட12 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

‘நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிக்கவும்’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு எதிர்ப்பாளர்கள் பாராளுமன்ற நுழைவாயிலில் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதன் பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸ் அதிகாரிகள் குழு, எதிர்ப்பாளர்கள் சிலரை கைது செய்ய முற்பட்ட போது அங்கு பதற்றநிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய செய்தி

கைதான 10 மாணவர்கள் மற்றும் 2 மாணவிகள் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.