புனித மிக்கேல் கல்லூரியில் இடம்பெற்ற தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் காள்கோள் விழா!

2022 ஆண்டு புனித மிக்கேல் கல்லூரியில் தரம் ஒன்றில் கால் தடம்பதிக்கவிருக்கும் மாணவர்களை வரவேற்கும் காள்கோள் விழா இன்று (04) திகதி மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.

புனித மிக்கேல் கல்லூரியின் அதிபர் பயஸ் ஆனந்தராஜா தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக புனித மிக்கேல் கல்லூரியின் போசகரும் மட்டக்களப்பு அம்பாரை மறை மாவட்ட ஆயருமான பேரருட்திரு ஜோசப் பொன்னையா ஆண்டகை கலந்து சிறப்பித்த நிகழ்விற்கு சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிமனையின் ஆரம்பப் பிரிவிற்கு பொறுப்பான உதவிக்கல்விப் பணிப்பாளர் திருமதி. உமாபதி விவேகாநந்தம் கலந்து சிறப்பித்திருந்தார்.

அதிதிகள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து கல்லூரியின் பிரதான மண்டபத்தில் அரங்க நிகழ்வுகள் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டு, மும்மத இறைவணக்கத்துடன் ஆரம்பமாகியது. நீண்டதொரு வரலாற்றுப் பின்ணனியை கொண்ட பல சாதனைகளை தன்னகத்தே கொண்ட புனித மிக்கேல் கல்லூரியில் தரம் ஒன்றிற்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட மாணவர்களை தரம் இரண்டில் கல்விகற்கும் மாணவர்கள் மலர்மாலை அணிவித்து மகிழ்வுடன் வரவேற்ற குறித்த தருணத்தை இந்த மாணவச்செல்வங்களால் வாழ்நாளில் மறக்க முடியாத நினைவாக அவர்களது மனங்களில் நிலைத்து நிற்கும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்போது தரம் ஐந்து மாணவர்களின் வரவேற்பு நடனம் உள்ளிட்ட ஏனைய ஆரம்பப் பிரிவு மாணவர்களின் கலை நிகழ்வுகள் அரங்கை அலங்கரித்ததுடன், பிரதம அதிதி உள்ளிட்ட அதிதிகளின் உரையினைத் தொடர்ந்து ஆரம்பப் பிரிவிற்கான கட்டடத் தொகுதிக்கு புதிய மாணவர்களை சிறார்களின் பண்ட்டு வாத்திய மரியாதையுடன் அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கான வகுப்பறையில் இன்றைய முதல் நாள் செயற்பாடுகள் ஆரம்பமாகியிருந்தன.

இந்நிகழ்வுகளில் கல்லூரியின் பிரதி அதிபர் அருட்பணி லெபோன் சுதன், ஆரம்பப் பிரிவிற்குப் பொறுப்பான அருட்தந்தை மெல்சன், இயேசு சபைத் துறவி அருட்பணி சுவைக்கின் ரொசான் அடிகளார், பாடசாலையின் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை நலன்விரும்பிகள் என பெருமளவானோர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.