தமிழக முதல்வரிடம் சிறீதரன் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை!

இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதில் தமிழக முதல்வர் மதிப்பிற்குரிய மு.கா.ஸ்டாலின் அவர்களின் பங்கு அளப்பரியதாக இருக்கவேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைக்கு தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினையை கருத்திற்கொண்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் இலங்கை மக்கள் அனைவருக்கும் 120 கோடிகளுக்கு மேல் பெறுமதியான உணவு பொருட்களை வழங்க முன்வந்துள்ளார். இது மிகவும் மகிழ்ச்சியும் ஆறுதலும் அளிக்கிறது.

இந்தநிலையில் அதற்கு அப்பால் இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கும் தமிழக முதல்வரின் பங்கு காத்திரமாக இருக்கவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை 3000ஆயிரம் மில்லியன் டொலர்களை இந்தியா இலங்கைக்கு வழங்கியுள்ளது.

அத்துடன் 4 லட்சம் தொன் எரிபொருளை இந்தியா, இலங்கைக்கு வழங்கியுள்ளது என்றும் சிறீதரன் எம்.பி குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.