புதிய பிரதமராக கரு ஜயசூரிய? வெளியாகியது பரபரப்புச் செய்தி.

சர்வகட்சி இடைக்கால அரசின் பிரதமர் பதவிக்கு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது எனப் பரபரப்புச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதற்குப் பல கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன என்று அந்தச் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 13 யோசனைகளுக்கமைய, இடைக்கால அரசமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியும் நேற்று இணக்கம் வெளியிட்டது. எனவே, இடைக்கால அரசமைக்க ஜனாதிபதி முடிவெடுத்தால் பிரதமராக கரு ஜயசூரிய நியமிக்கப்படுவார் என்று அந்தச் செய்திகளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரு ஜயசூரிய நாடாளுமன்றம் வருவதற்காக, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியில் எம்.பி. ஒருவர், தனது பதவியை இராஜிநாமா செய்யவுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.