பயிர்செய்கையில் ஏற்பட்ட பாதிப்பிற்கான இழப்பீடு வழங்கும் நடவடிக்கை.

பயிர்செய்கையில் ஏற்பட்ட பாதிப்பிற்கான இழப்பீடு வழங்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக விவசாயத்துறை அமைச்சர் சானக்க வக்கும்பர தெரிவித்துள்ளார்.

இதன்படி தற்போது வரையில் 3 மாவட்டங்களில் பயிர்செய்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதன் அறிக்கைகள் அமைச்சுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய மாவட்டங்களினதும் தரவுகளை உடனடியாக பெற்றுக்கொள்வதற்கு உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பயிர்செய்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு 2500 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.