பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தமது பதவியினை இராஜினமா செய்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தமது பதவியினை இராஜினமா செய்துள்ளார்.

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையினைத் தொடர்ந்து அவர் தமது பதவியினை இராஜினமா செய்துள்ளார்.

கொழும்பிலும் நாட்டின் பல பகுதிகளிலும் அரசாங்க ஆதரவாளர்கள் அரசாங்க எதிர்ப்பு ஆதரவாளர்களுடன் மோதலை அடுத்து நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையிலேயே அவரது இராஜினாமா இடம்பெற்றுள்ளது.

தற்போது நிலவும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வாக பதவியில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது சகோதரருக்கு வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு பிரதமர் ராஜபக்ச இன்று தனது முடிவை எடுப்பதாக அறிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.