கொடூரமாக நடந்த கோடீஸ்வர தம்பதி கொலை! நாய் செய்த நெகிழ்ச்சி செயல்

சென்னையில் கோடீஸ்வர தம்பதி கொலை செய்யப்பட்ட நிலையில், அவர்களின் உடல்களை எடுத்து செல்லும்போது நாய் ஒன்று ஆம்புலன்ஸ் முன்பு வந்து நின்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மயிலாப்பூரில் வசித்து வந்த கோடீஷ்வர தம்பதியான ஸ்ரீகாந்த்-அனுராதா, கார் ஓட்டுனரால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து, குற்றவாளிகளை கைது செய்த பொலிசார் அவர்களிடம் விசாரணை நடத்தி, பல லட்சம் மதிப்பிலான நகைகளை மீட்டனர். மேலும், கொலை செய்யப்பட்ட தம்பதியரின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கொடூரமாக நடந்த கோடீஸ்வர தம்பதி கொலை! நாய் செய்த நெகிழ்ச்சி செயல்

இந்த நிலையில், ஸ்ரீகாந்த்-அனுராதா தம்பதியின் உடல்களை தோண்டி எடுக்கும்போது நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று நடந்தது. நேற்று மாலை அவர்களது உடல்களை மயான ஊழியர்களை வைத்து பொலிசார் தோண்டி எடுத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது பண்ணை வீட்டில் உள்ள நாட்டு நாய் ஒன்று, ஊளையிட்டபடி அங்கேயே நின்றது. அதனை விரட்டியபோதும் அங்கிருந்து போகவில்லை. ஸ்ரீகாந்த்-அனுராதா இருவரும் தங்கள் பண்ணை வீட்டிற்கு வரும்போது அந்த நாய்க்கு உணவளித்து வந்ததாக கூறப்படுகிறது.

பின்னர், இருவரின் உடல்களையும் ஆம்புலன்சில் ஏற்றும் வரை அப்பகுதியை சுற்றி வந்தது. அத்துடன் ஆம்புலன்ஸ் கிளம்பி மணலில் சிக்கியபோது, அந்த நாய் வாகனத்தின் முன்பு வந்து நின்றது. அங்கிருந்தவர்கள் துரத்தியபோது சோகத்துடன் சென்றது. இச்சம்பவம் அங்கிருந்தவர்களை சோகத்தியில் ஆழ்த்தியது.

Leave A Reply

Your email address will not be published.