இராணுவ ஆட்சிக்கு வாய்ப்பு! – சந்திரிகா எச்சரிக்கை.

நாட்டில் இராணுவ ஆட்சி ஏற்படுவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளன முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எச்சரித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனநாயக ஆட்சிக்காகவும், நீதிக்காகவும் அமைதியான முறையில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், நாட்டில் வன்முறைச் சம்பவங்கள் தூண்டப்பட்டு, இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்படலாம்.

இந்தநிலைமையில், மக்கள் அமைதியைப் பேணவேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.