இந்தியாவுக்கு மஹிந்த ராஜபக்ஸ தப்பினாரா: இந்திய தூதரகம் மறுப்பு.

இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்துடன் இந்தியாவுக்கு தப்பி சென்றதாக கூறப்படும் தகவலில் உண்மை இல்லை என, இலங்கையில் உள்ள இந்திய துாதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கை பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ஸ நேற்று முன் தினம் ராஜினாமா செய்த பின் அவர் குடும்பத்துடன் தலைமறைவானார்.
அவர் குடும்பத்துடன் இந்தியா தப்பி சென்றுவிட்டதாக சமூகவலைதளங்கள் மற்றும் சில இலங்கை ஊடகங்களில் செய்தி பரவியது.’இது முற்றிலும் தவறானது, அடிப்படை ஆதாரமற்றது. இதை நம்ப வேண்டாம்’ என, இலங்கையில் உள்ள இந்திய துாதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.