ரணிலை நேரில் சந்தித்து வாழ்த்திய இந்தியத் தூதர் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் பேச்சு.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடமையை இன்று பொறுப்பேற்ற கையோடு, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, அவரைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தல், பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது பேசப்பட்டன.

அதேவேளை, பிரதமர் ரணில் விரைவில் இந்தியா செல்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சீனா உள்ளிட்ட மேலும் சில நாடுகளின் தூதுவர்களும் ரணிலைச் சந்திக்கவுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.