‘பல்டி’யடித்த ஹரீன், மனுஷவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை.

“அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்ட ஹரீன் பெர்ணான்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உப தலைவரான லக்‌ஷ்மன் கிரியெல்ல இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.

அமைச்சுப் பதவிகளை ஏற்பதில்லை என ஐக்கிய மக்கள் கட்சி முடிவெடுத்திருந்த நிலையில், கட்சி முடிவை மீறி செயற்பட்டதாலேயே இவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.