எரிபொருள் வரிசையில் நின்ற பெண்ணிடம் தங்க நகை பறிப்பு.

மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருளைப் பெறுவதற்காக வரிசையில் நின்ற பெண் ஒருவரின் கழுத்திலிருந்த தங்க நகையை (நெக்லஸ்) மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பறித்துச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தம்புள்ளையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றின் வரிசையில் இரவு வேளையில் இடம்பெற்றுள்ளதாக தம்புள்ளைப் பொலிஸார் தெரிவித்தனர்.

தம்புள்ளையைச் சேர்ந்த 50 வயதுடைய பெண்ணொருவரே பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த தங்க நகையின் பெறுமதி சுமார் 500,000 ரூபா என முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.