வார்னர் சாதனையை முறியடித்து 2-வது இடம் பிடித்த ஜாஸ் பட்லர்.

குஜராத் – ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதி போட்டி போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்துள்ளது. 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி விளையாடி வருகிறது.

நடப்பு ஐபிஎல் தொடரில் 4 சதங்களுடன் அதிக ரன்கள் அடித்தவர்களுக்கான ஆரஞ்சு நிற தொப்பியை ஏற்கனவே வைத்து இருக்கும் பட்லர் இன்றைய போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளார். ஒரு ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் அடித்தவர்களுக்கான வீரர்கள் பட்டியலில் டேவிட் வார்னரை பின்னுக்கு தள்ளி பட்லர் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

இன்றைய போட்டிக்கு முன்பு வரை இந்த பட்டியலில் முதல் இடத்தில் விராட் கோலி (973 ரன்கள் – 2016 ஆம் ஆண்டு ) 2-வது இடத்தில் வார்னர் (848 ரன்கள் – 2016) இருந்தனர். இன்றைய போட்டிக்கு முன்புவரை 824 ரன்கள் எடுத்திருந்த பட்லர் இன்றைய போட்டியில் 25 ரன்கள் எடுத்தபோது வார்னர் சாதனையை முறியடித்தார்.

Leave A Reply

Your email address will not be published.