9 வயது ஆயிஷா மரணம் தொடர்பில் ஒருவர் கைது

அட்டுலுகம பிரதேச அல் கஸ்ஸாலி மகா வித்தியாலயத்தில் தரம் நான்கில் கல்வி கற்ற ஒன்பது வயதுடைய பாத்திமா ஆயிஷா என்ற பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பாக , உடல் கண்டு பிடிக்கப்பட்ட இடத்துக்கு அருகே இருந்த கீரைக் கொட்டு ஒன்றிலிருந்தவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கீரை கொட்டை (குடிசை) அண்டிய காணியின் சேற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மாணவியின் சடலத்தை மக்கள் உதவியுடன் பொலிஸார் மீட்டனர்.

உடலை கண்டுபிடித்த பகுதியின் அருகே இருந்த கீரை கொட்டை பரிசோதனை செய்த போது , அங்கு வசிக்கும் நபரின் படுக்கைக்கு கீழே இருந்து சேறு படிந்த சாரம் ஒன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்தே சந்தேகத்தின் பேரில் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Leave A Reply

Your email address will not be published.